மழைக்கால காதல்
November 16, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
November 16, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
*
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.
*
மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!
*
பெருமழையென முயங்கித் தீர்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி துறையினர்
November 14, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்
November 14, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்
October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்
October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை பிரசவம்
September 30, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
September 30, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
முத்தம்
August 7, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
August 7, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
A for Apple
July 31, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
July 31, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
மயூரேசன் அழைத்ததால்…
b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f - http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க
g -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
பச்சக் கலர் கேரட்
July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்
ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!
*
ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பச்சக் கலர் கேரட்
July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்
ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!
*
ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை
காதல் கவிதை
July 28, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
July 28, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் கவிதைகள்
June 25, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
June 25, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது
June 8, 2008, 10:46 pm | தலைப்புப் பக்கம்
June 8, 2008, 10:46 pm | தலைப்புப் பக்கம்
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.
எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?
*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கயிற்றின் மீது நடத்தல்
June 5, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
June 5, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
வரவேற்பறை மீன்தொட்டி
June 4, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்
June 4, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்
அறுபது பவுன் நகை போட்டு
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஏமாந்தியா?
June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்
ஏமாந்தியா?
June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
June 1, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்
June 1, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.
*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!
*
இமை மூடிய கண்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
குறுங்கதையும் குறுந்தொகையும் - 2
May 29, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
May 29, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?’
‘பாப்போம் பாப்போம்’
தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை
முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி
உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்
May 29, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
May 29, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்
செல்லரிக்கும் காதல்
May 27, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்
May 27, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்
அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.
*
காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்
*
நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.
*
என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?
*
செல்லரித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் பார்வை
May 25, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்
May 25, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்
என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
*
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.
*
நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!
*
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!
*
செடி நீட்டும் பூவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்
May 13, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்
May 13, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்
தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.
*
என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?
*
என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.
*
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.
*
இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!
***
வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல்,...தொடர்ந்து படிக்கவும் »
காதலும் கோபமும்
May 12, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதலும் கோபமும்
May 12, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் (திங்)கள் (குரல் பதிவு)
May 4, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்
நீ நினைக்கிறேன்.
நான் பேசுகிறாய்.
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும்?
*
பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது.
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று.
*
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!
*
குடையின்றி நீ வருகையில்
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!
*
நீ நிலாச்சோறுண்ணும்
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா!
இசையுடன் கேட்க : (நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் செ(ய்)வ்வாய்
April 28, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்
April 28, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்
அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
*
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
*
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
*
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
*
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அம்மா வாழ்ந்த மச்சுவீடு
April 23, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்
April 23, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு அது.
மச்சு வீடென்றால் எல்லோருக்கும் தெரியும்.
அத்தைப்பெண், மாமன்மகனான
அம்மாவும் அப்பாவும்
சிறுவயது முதல் விளையாண்ட வீடு.
அவர்களின் திருமணமே அந்த வீட்டில்தான் நடந்ததாம்.
அப்புறம் அப்பா காலத்தில்
தொழில் நலிவடைய, வீடு அடமானத்திற்குப் போனது.
கடைசியாக அப்பாவும் நலிவடைய
அவரைக்காப்பாற்ற வீட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
April 22, 2008, 10:39 pm | தலைப்புப் பக்கம்
April 22, 2008, 10:39 pm | தலைப்புப் பக்கம்
நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.
*
நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.
*
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.
*
நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*
நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
(enom + google) -> dreamhost & blogger -> wordpress
April 22, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்
April 22, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்
பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரசுக்கு மாறியதில் எதிர்பார்த்த அளவுக்கு சிரமம் இல்லையென்றாலும், கடைசி வரை ஓரு பதற்றம் இருக்க தான் செய்தது!
சித்திரை ஒன்று முதல் வேர்ட்பிரசில் பதியவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. 2007 ஜனவரியில் google apps மூலமாக enom நிறுவனத்திடம் arutperungo.com தள முகவரியை பதிவு செய்துகொண்டு பிளாக்கரிலேயே பதிவெழுதிக்கொண்டு வந்தாலும், துவக்கம் முதலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!
April 18, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்
April 18, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்
‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!
*
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.
*
கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள்!
*
நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
*
இப்படி வாசிக்க…...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு!
April 12, 2008, 8:54 am | தலைப்புப் பக்கம்
April 12, 2008, 8:54 am | தலைப்புப் பக்கம்
மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!
*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
*
நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு!
April 12, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்
April 12, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்
மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.*தாமதமானாலும்,நான் வரும்வரைகாத்திருக்கிறாள் காதலி.தாமதமானதும்,தேடிக்கொண்டுவீட்டுக்கே வருகிறாள் தோழி!*ஒருநாள் பேசாவிட்டாலும்கோபிக்கிறது காதல்.யுகம் கடந்து பேசினாலும்குதூகலிக்கிறது நட்பு!*நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டியதண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?
April 8, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
April 8, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்
சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
காதல் தேடும் வாழ்த்து
March 22, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்
March 22, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்
எனக்கு என்னைப் பிடித்திருப்பதேஉனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.*அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்றுவெட்கப்படுகிறவளை என்ன செய்ய?*கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்எனக்கு வருத்தமாயிருக்கிறது.ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!*உன் வாசனையைஎன்னுடன் கூட்டிச்செல்வதற்காகவேதினமும் உன் கைக்குட்டை வாங்கிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தண்டிப்பதா? மன்னிப்பதா?
March 10, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
March 10, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
உருப்படியா எதாவது நெனைடா! வலைப்பதிவுல எழுதனும்ல!
March 6, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்
March 6, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்
வலைப்பதிவுல எழுதறதெல்லாம் நெனச்சத அப்படியே எழுதினதா என்ன? இல்லல்ல? வடிகட்டி , அடிச்சுத் திருத்திதான எழுதிகிட்டிருக்கோம். நெனைக்கிறத அப்படியே எழுதினா எப்படி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்! என்னமோ மறந்துட்ட மாதிரி இருக்கே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஷூ போட வேண்டியதில்ல. பர்ஸ், மொபைல், ஐடிகார்ட் எல்லாம் இருக்கு கெளம்புவோம். போக போக யோசிப்போம். இன்னைக்கு அந்தமாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ஆம்.நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.
March 6, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்
March 6, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்
அண்மைக்காலமாகஎனக்குள்ளும் புதிய மாற்றங்கள்தென்படத் துவங்கியிருக்கின்றன.என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.இராத்திரியின் நீளம் விளங்குகிறது.நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.தலையணை நனைக்கிறேன்.மூன்று முறை பல்துலக்குகிறேன்.காத்திருக்கும்போது நிமிடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒன்றாகத் தந்தாய்
March 4, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
March 4, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்ஒன்றாகத் தந்தாய்.பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்ஒன்றாகத் தந்தாய்.பார்வையற்ற கண்களின் இருமையும்வாயில்லா இதயத்தின் வெறுமையும்ஒன்றாகத் தந்தாய்.இனிமைகொள்ள ஒரு நினைவும்தனிமைகொல்ல ஒரு நினைவும்ஒன்றாகத் தந்தாய்.எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்இரண்டாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தலைப்பில்லாக் கவிதைகள்
March 3, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
March 3, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
வாசிக்கப்படாத தனது கவிதையொன்றைவாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,துரத்திக்கொண்டே இருக்கின்றன...எழுதப்படாத பல கவிதைகள்!*ஷேர் ஆட்டோவின் மூவர் அமரும் பின்னிருக்கையில்பெண்கள் இருவர் அமர்ந்திருக்க,முன்பக்கம் ஓட்டுநர் அருகே அமர்கிறேன்.சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.நான் இன்னும் பண்படவேண்டுமெனநினைத்துக்கொண்டிருக்கலாம்.பரவாயில்லை.இயல்பாய்ப் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி..
March 2, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
March 2, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
கடலினும் ஆழமானக் காதலுடன்கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி. அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய் அலைந்து கொண்டிருந்தது கடல். நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும் அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள். நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை. காற்றுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதலும் கடைசியுமாக
February 29, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
February 29, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
பார்வைகளை எனக்களித்துவிட்டுவெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வான்?*எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானேஎன்னைக் காதலிக்கிறானா? கண்ணைக் காதலிக்கிறானா?*தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு வெட்கத்தைக் கொடுக்கிறேன்.மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.*ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.என்னிடம் இதழ்வசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தப்பித்துச் சென்று சிறைபடுதல்
February 19, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்
February 19, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்
எவருக்கும் அனுமதியற்றஎனது அறைச்சுவரெங்கும் ஆணியில்லாமல் தொங்குகின்றனஉனது புகைப்படங்கள்.ஒன்றில் சிரிக்கிறாய்.ஒன்றில் சிணுங்குகிறாய்.ஒன்றில் பயப்படுகிறாய்.ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.உன்னிடமிருந்து தப்பிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
February 18, 2008, 10:05 pm | தலைப்புப் பக்கம்
February 18, 2008, 10:05 pm | தலைப்புப் பக்கம்
பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனைமருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்என்வேகத்தில் என்னருகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் வாரம் - 5
February 14, 2008, 9:15 pm | தலைப்புப் பக்கம்
February 14, 2008, 9:15 pm | தலைப்புப் பக்கம்
இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!*எல்லா கணங்களும் உன் நினைவுதானென்றுபொய் சொல்லவில்லை. ஆனால்…ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்உன்னைதான் நினைக்கிறேன்.*நீ பிரிந்தபிறகும் கூட‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கிஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!*இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்இன்று சுமக்க முடியா கனமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் வா(வ)ரம் - 1
February 10, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்
February 10, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்
என் எழுத்தில் அடங்க மறுக்கும்திமிரான கவிதை நீ!*என் காதலுக்குசிறப்பென்று சொல்லிக்கொள்ளஎதுவுமேயில்லை.அது வெகு இயல்பானது,என் சுவாசத்தைப் போல!*நீ பேசிய மொழியனைத்தும்காதலின் தேசியமொழிதான்.*நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போதுஉன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்அடர்ந்து கிடந்தது காதல்!*நாம் நடந்த பாதையில்நான் மட்டும் நடக்கையில்பிஞ்சுக்காற்று தோள்தொடஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நீங்களுமா நீலகண்டர்?
February 4, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்
February 4, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்
குறுந்தொகைப் பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கும்பொழுது நண்பனின் தேடலில் சிக்கியது இது. பதினெட்டாம் நூற்றாண்டில் நீலகண்ட சுவாமிகள் என்பவரால் எழுத(தொகுக்க?)ப்பட்ட பாடல்கள் அடங்கியது. முழுக்க முழுக்க நன்னெறி கருத்துகளைக் கூறும் பாடல்கள். சிறு வயதில் கேட்ட சில நன்னெறிக் கதைகளை உவமையாகவும் சில பாடல்களில் காணலாம். இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துகள் என்பதால் இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
குறுங்கதையும் குறுந்தொகையும் - 2
February 2, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்
February 2, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்
‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?’‘பாப்போம் பாப்போம்’தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
மரமெல்லாம் மரம் மட்டுமல்ல!
January 31, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
January 31, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
நின்றபடி தென்னை.நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்அலைந்தபடியே அதன் நிழல்.*வான்தொடும் பிரயத்தனத்துடன்வளர்ந்த ஆலஞ்செடி,மரமானதும் மண்தொடவே விழைகிறதுவிழுதுகளால்.*கோவிலில் இருப்பது சாமிமரமாம்…சின்னத்தாயி தூக்குப்போட்டது பேய்மரமாம்…இரண்டுமே வேம்புதான்!*பள்ளிநடுவில்நிழல் பரப்பும் பெரும்விருட்சம்,ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.நட்டவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
குறுங்கதையும் குறுந்தொகையும் - 1
January 31, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
January 31, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
‘வாப்பா… அருள். எப்படி இருக்க? நேரத்துலையே வர்றேன்னு சொல்லியிருந்த?’‘சாரி ஆண்ட்டி. வர்ற வழில கொஞ்சம் லேட்டாகிடுச்சு.இளா எங்க ஆண்ட்டி?’‘மாடியில்’ என்று அவர் கைகாட்ட படியில் ஏறினான். அவனுக்கும் இளாவுக்கும் இடையில் இருப்பது கெமிஸ்ட்ரி, பையாலஜி எல்லாம் கலந்த ஒரு ‘இது’வாலஜி. அவனுக்கு குன்னூர். அவளுக்கு கோயம்புத்தூர். +1, +2 இருவரும் ஒன்றாக குன்னூரில் படிக்கும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
ஜனனி.. ஜனனி..
January 30, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்
January 30, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்
என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
காதல் கூடம் - 6
January 29, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
January 29, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
காதல் கூடம் – முதல் பகுதிதலைமையாசிரியர் அறைக்குள்பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்கஇயல்பாய்ப் பேசினார் அவர்.…அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழுநம்முடைய தலைமையில்…செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டுநாம் வெளியேறுகையில்நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?
January 29, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்
January 29, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்
கல்லூரியில ரெண்டாவது வருசம் படிக்கும்போது நடந்தது இது. எங்கள மாதிரி மொத்தம் முப்பதே பேர் இருக்கிற வகுப்புல ப்ராக்ஸி போட்றதுங்கறது கஷ்டம்தான். செமஸ்டர் ஆரம்பமா இருந்ததால எல்லாரும் புது லெக்சரருங்க. ஆளு, பேரெல்லாம் அவங்க தெரிஞ்சிக்கிற வரைக்கும், ஷிஃப்ட் வச்சு மாத்தி மாத்தி ப்ராக்ஸி போட்டு கட்டடிச்சிட்டு இருந்தோம். ஒரு நாள் இன்னொருத்தனுக்குப் பதிலா நான் ப்ராக்ஸி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
January 28, 2008, 10:07 pm | தலைப்புப் பக்கம்
January 28, 2008, 10:07 pm | தலைப்புப் பக்கம்
முந்தைய நட்சத்திர இடுகைமூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
பாடல்களும், நினைவுகளும்!
January 28, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்
January 28, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்
பாடத் தெரியாது என்பதனைவிட எனக்குப் பாடல்களை முணுமுணுக்கக் கூடத் தெரியாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் பாடல்களை கேட்பது எப்போதும் பிடித்தமான ஒன்று. பாடல்களைக் கேட்கும்போது எனக்கு பாடல்வரிகள் கோர்வையையாய் மனதில் ஏறுவதில்லை; மாறாக அந்த பாடலைக் கேட்கும் சூழலும் அந்தப் பாடலின் இசையோடு சேர்ந்து மனதில் எங்கோப் போய் தங்கிவிடுகிறது. எல்லோருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
மொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து!
January 11, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்
January 11, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்
கடந்த ஆண்டு பொங்கலுக்கு இங்கே செல்லவும்.எழுத்து மட்டுமே என்னுடையது. படங்கள் மடலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நான் பிடித்ததில் எனக்குப் பிடித்தது
January 9, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்
January 9, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்
2007 இல் நான் பிடித்த படங்களில் எனக்குப் பிடித்த ஒன்றை பதிவிட்டு அதனைப் பற்றி சில வரிகள் எழுத சொல்லி சர்வேசன் அழைப்பு விடுத்ததால் இந்தப் பதிவு.புகைப்படமெடுப்பதை கலையாக செய்யும் கலைஞனல்ல நான். நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதிக்காகவே கடந்த ஆண்டு ஒரு படப்பொட்டி வாங்கியிருந்தேன். “புது சட்டில போட்டா, நாயி ஏழு ஆப்ப கழி திங்குமாம்” – இப்படி ஒரு சொலவடை எங்களூரில்...தொடர்ந்து படிக்கவும் »
மௌனம் சுமந்த மலரொன்று மடிகின்றது!
January 8, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்
January 8, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்
செடிகளைப் புறக்கணித்து செல்லும்விரல்களின் பயணமொன்றை நிறுத்தி,ரசிக்க வைத்தது,இதுவரை பூக்காத பூஞ்செடியொன்று.இலை கோதத் துவங்கி,நீரூற்றவும், உரமிடவும்,மண்பிடித்து விடவும்பழக்கமானது விரல்களுக்கு.விரலின் அருகாமையில் செடி சிலிர்த்துக்கொண்டும்செடியின் ஸ்பரிசத்தில் விரல்கள் இளகிக்கொண்டும்ஒரு புதிய பயணத்துக்கு ஆயத்தமாயின இரண்டும்.கீழ்வானத்தில் முழுநிலவும்; மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கதையெழுதிய கதை
January 7, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்
January 7, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்
பிப்ரவரி மாதப் பதிவுகளுக்காக மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்தபடி சில காதல் கவிதைகளை யோசித்துக் கொண்டிருந்த போதுகோபித்துக் கொண்டுஎன்னோடு நீ பேசுவதில்லையெனமுருகனிடம் முறையிடப்போனால்அவனோ,இரண்டு நாட்களாய்வள்ளி தன்னிடம்பேசுவதில்லையெனமயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.இப்படி ஒரு கவுஜையை எழுதி அறைத் தோழனிடம் காட்டிய போது ‘நல்லாதான் இருக்கு. ஆனா இது கவிதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ஒன்றில் நான்கு ( 4 in 1)
December 27, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
December 27, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
எவனா இருந்தா எனக்கென்ன?
December 21, 2007, 3:15 am | தலைப்புப் பக்கம்
December 21, 2007, 3:15 am | தலைப்புப் பக்கம்
தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
December 17, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
December 17, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்“food court போகலாம் வர்றீங்களா?”பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ‘ஓ போலாமே’ என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்களுக்குள் ஆரம்பித்த பழக்கம் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. கோவையில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வந்த அவனுக்கும், மதுரையில் ஒரு மகளிர் கல்லூரியில் MCA முடித்து...தொடர்ந்து படிக்கவும் »
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
December 17, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்
December 17, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்“food court போகலாம் வர்றீங்களா?”பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ‘ஓ போலாமே’ என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்கள
