வன்முறை- சமூக உளவியலின் சிக்கல்கள்
February 15, 2010, 11:05 pm | தலைப்புப் பக்கம்
February 15, 2010, 11:05 pm | தலைப்புப் பக்கம்
மழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையை களைப்பதற்காக தனது காரிலிருந்து கீழே இறங்கிய முத்துச்சாமி என்ற நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார். அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரை...தொடர்ந்து படிக்கவும் »
சென்னையின் கலாச்சார நிகழ்வு- புத்தகக் கண்காட்சி
January 12, 2010, 12:24 am | தலைப்புப் பக்கம்
January 12, 2010, 12:24 am | தலைப்புப் பக்கம்
சென்னையின் உற்சாகமான புத்தக உற்சவம் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின்(09-10/01/2010)உச்சபட்ச கூட்டத்தோடு இந்த ஆண்டு நிறைவுற்றது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் திருவிழா சென்னையின் கலாச்சாரம் சார்ந்த செயல்பாடாக உருமாறி வருவதாக அவதானிக்கிறேன். வாசகர்கள் புத்தகங்களை கொத்து கொத்தாக அள்ளிச் செல்கிறார்கள். எந்தக் கடைக்காரரும் இந்த ஆண்டு கண்காட்சி முந்தைய ஆண்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
உப்பு : ரமேஷ் பிரேம்
March 16, 2009, 3:20 pm | தலைப்புப் பக்கம்
March 16, 2009, 3:20 pm | தலைப்புப் பக்கம்
ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும். ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
கருணாநிதி சார். ஹாஸ்பிடல் வாழ்க்கை சுகமா?
February 4, 2009, 8:19 am | தலைப்புப் பக்கம்
February 4, 2009, 8:19 am | தலைப்புப் பக்கம்
தலைவா, தமிழினம் காக்கும் ஐந்தமிழ் அறிஞா,எல்லோரும் உங்களை காய்ச்சி எடுக்கிறார்கள். நல்லவேளையாக ஏ.சி. அறைக்குள் படுத்துக் கொண்டீர்கள். அடுத்தவன் எரிந்தாலும் சரி, எவன் பொண்டாட்டி சீரழிந்தாலும் சரி. இந்த வயதில் எத்தனை பணிச்சுமை உங்களுக்கு? ஸ்டாலினா, அஞ்சா நெஞ்சனா, மாறன் பெற்றெடுத்த பவுடர் பேபியா, தமிழ்த் தாயை உய்விக்க வந்த கவிதாயினியா எவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
மலேசியா
June 28, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்
June 28, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்
மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன் மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும் கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம். முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது பயணப்படி). அப்படி இப்படியென்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
மணல் வீடு - சிற்றிதழ் அறிமுகம்
June 15, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்
சிற்றிதழ்கள் உருவாக்கும் விவாதங்களும், அதன் விளைவுகளும் படைப்புகளை அடுத்த தளத்துக்கு நகர்த்தும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தீவிர இலக்கியத்தில் சிற்றிதழ்கள் தவிர்க்க இயலாதவை. படைப்பியக்கத்தில் வெகுசன இதழ்களும், இடைநிலை இதழ்களும் செய்யத் தயங்கும் அல்லது செய்யவியலாத எவ்விதமான முயற்சிகளையும் சிற்றிதழால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
எண்ணூற்று அறுபது டிகிரி புரோட்டா மாவும் மோரு ராமசாமியும்
June 5, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
June 5, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
சென்ற வாரம் ஒருநாள் பாண்டியிடம் இருந்து போன் வந்தது ,ஈரோடு ரயில்நிலையத்திற்கு வெளியிலிருக்கும் குஜலி தள்ளுவண்டிக் கடையில் எண்ணூற்று அறுபது டிகிரி புரோட்டா மாவு வைத்திருப்பதாக. "எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்தும் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது ?" என்றும் கேட்டான் பாண்டி. எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்துவதற்கு என்ன செய்யலாம் ; என்ன செய்ய வேண்டும் ?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
நித்யா கவிதை அரங்கு : க.மோகனரங்கன் கவிதைகள்
May 12, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்
1) பாற்கடல்விதிக்கப்பட்டதற்கும்கூடுதலாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படவில்லை.மெய்யாகவே,தாக மேலீட்டினால் தான்அதுவும் கூடஒரு மிடறுதான் இருக்கும்பதைத்து நீண்ட உன்மெலிந்த கைகள்நெறித்து நிறுத்தவிக்கித்துப் போனேன்அறையின் நடுவேகொட்டிக் கவிழ்ந்த கலயத்தினைவெறித்த வண்ணம்முணுமுணுக்கிறாய்விதிக்கப் பட்டதற்கும்குறைவாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படாததே---2) தவளையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.
May 11, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்
May 11, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்
1) இடவழுவமைதி ஒரே பெயரில்ஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.உசிதமல்ல என்றுணர்ந்தபால்ய தினங்கள்ஒரே வகுப்பில்ஒரே பெயரில்இரண்டு பேர் இருந்தோம்முதலெழுத்தில் வித்தியாசம்என்னுடையது 'என்'அவனுடையது 'எஸ்' அவனுக்கான பாராட்டு சமயங்களில் எனக்குஎனக்கான தண்டனைசமயங்களில் அவனுக்கு அடையாளம் பிரிக்கபட்டப் பெயர்கள்சூட்டப்பட்டோம்அவன் உலக்கைநான் ஊசி காய்ச்சலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி
March 30, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்
March 30, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்
கொங்கு நாட்டுச் சொலவடைகள்-Iஇந்தச் சொலவடைகள் கொங்குப் பகுதியில் என் அமத்தா தலைமுறையால் இயல்பாக உபயோகப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறையில் அருகிப் போனவற்றில் சில.தற்சமயம் இருபத்தைந்து என்னால் பதிவு செய்ய முடிந்தது. உங்களுக்கு தெரியுமெனில் பதிவு செய்யவும்.இவற்றில் இருக்கும் இரட்டை அர்த்தங்களை உங்களால் பட்டியலிட முடிந்தாலும் நல்லது.1. ஆளை நம்புனா அத்துவானம்;மகனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
அவனைப் பற்றிய குறிப்புகள் - ராஜா சந்திரசேகரின் கவிதைகள்.
March 12, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்
March 12, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்
கவிதை வாசிப்பு போதையை ஒத்ததாக இருக்கிறது. இங்கு 'கவிதை'யின் முன்னால் நல்ல என்ற சொல்லினை சேர்த்துப் படிக்கவும். கவிதையில் நல்ல கவிதை கெட்ட கவிதை என்ற பகுப்பினை உண்டாக்குவதற்கான உரிமையை எனக்கு யார் கொடுத்தார்கள் என்பது தருக்க ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வினாதான்.சில கவிதைகள் படித்து முடிக்கும் போது பெரும் தளர்ச்சியை உருவாக்கிவிடுகின்றன. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
புதரோரம் பூத்திருக்கும் பிச்சிப்பூ- பாவண்ணன் கவிதைகள்
March 3, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
March 3, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
மனித வாழ்வின் சிக்கல்களையும், திடுக்கிடல்களையும், சுகதுக்க கணங்களையும் எவ்வித அரிதாரமுமில்லாமல் படைப்பாக்கும் கலையை பெற்றிருக்கும் கலைஞன் வாசக மனதின் நுண்ணிடுக்குகளில் எளிதாக பயணம் செய்துவிடுகிறான்.பாவண்ணன் அத்தகைய ஒரு படைப்பாளி.பாவண்ணனின் கவிதைகளை சமீபத்தில் அந்திமழை.காம் இணைய சஞ்சிகையில் வாசிக்க முடிந்தது. (http://andhimazhai.com/news/viewmore.php?id=6627&action_type=viewnews)முத்தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.
February 27, 2008, 11:34 pm | தலைப்புப் பக்கம்
February 27, 2008, 11:34 pm | தலைப்புப் பக்கம்
இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை செல்லும் போது விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு "10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு" என்ற முகவரியை பெற்றுக் கொண்டேன்.முதல் தாள் சரியாக எழுதவில்லை என்றதும் அடுத்த தேர்வை தவிர்த்துவிட்டு சுஜாதாவை பார்க்கச் செல்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும் ஊதிய வெட்டும்
January 31, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்
January 31, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்
தனது ஊதிய வெட்டு என்னும் நடவடிக்கையால் டி.சி.எஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமன்று மென்பொருள் துறையில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.டி.சி.எஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்(அக்டோபர் முதல் டிசம்பர் வரை)ஆயிரத்து முந்நூற்று முப்பத்தொரு கோடிகள் இலாபம் ஈட்டியிருக்கிறது. இருந்த போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்
January 24, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
January 24, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.இவ்வாண்டு கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. நண்பர் வெங்கட்டிடம் 'சிங்கம் வந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன். ஜெயமோகனோடு நணபர் வெங்கட். சிலரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

